தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

By

Published : Jan 26, 2022, 6:46 PM IST

Updated : Jan 26, 2022, 7:29 PM IST

பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும்.

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நேற்று (ஜன.25) உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த நிலையில், இன்று (ஜன.26) மாலை உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்தான அறிவிப்பை தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்தார்.

அதில்,

'வேட்பு மனு தாக்கல் தொடங்கும் தேதி (ஒரே கட்டம்) : 28-01-2022

வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் : 04-02-2022

வேட்புமனு தாக்கல் பரிசீலனை நாள்: 05-02-2022

வேட்புமனு திரும்பப்பெறுவதற்கான கடைசித்தேதி: 07-02-2022

இறுதி வேட்பாளர் பட்டியல்: 07-02-2022

வாக்குப்பதிவு நடைபெறும் தேதி: 19-02-2022

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி: 22-02-2022

மறைமுகத் தேர்தல் நடைபெறும் தேதி : 04-03-2022' என அறிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jan 26, 2022, 7:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details