தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரக்கோணம் கொலை வழக்கு - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் போராட்டம்! - arakonam murder issue

சென்னை: தேர்தலை பயன்படுத்தி, சாதிய வன்மத்தோடு இரு இளைஞர்களை படுகொலை செய்யபட்டதை கண்டித்து சென்னையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

saidapet
saidapet

By

Published : Apr 9, 2021, 5:16 PM IST

தேர்தலை பயன்படுத்தி அரக்கோணம் அருகே சோகனூர் என்ற கிராமத்தில் தலித் இளைஞர்கள் இருவரை அடித்து கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தியும்,பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணனி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.கே,மகேந்திரன், கடந்த 6ஆம் தேதி நடந்த தேர்தல் அன்று தலித் இளைஞர்கள் இருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளனர். எந்தக் கட்சிக்கு வாக்களித்தனர் என்று கேட்டு பட்டியலின இளைஞர் தாக்கப்பட்டு படுகொலை செய்து உள்ளனர்.

அவர்கள் குடும்பத்திற்கு தலா 50்லட்சம் நிவாரணம் வழங்கி அரசு வேலை வழங்க வேண்டும். சாதிய படுகொலை தடுத்து நிறுத்த சிறப்பு சட்டங்களை கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பொன்னமராவதியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details