சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் இம்மாதம் நடக்கவிருந்த காவலர் உடற்தகுதித் தேர்வுகள் ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஐஜி தீபக் தாமோர் காவல் துறை அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், "2020ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காப்பாளர்கள் (வார்டன்), தீயணைப்பு வீரர்கள் காலியிடப் பணியிடங்களை நிரப்பும் தேர்வை தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திவருகிறது.