தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை உயர்வு!

சென்னை : அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  கடந்த ஆண்டை  ஒப்பிடுகையில்  13 ஆயிரத்து 216 மாணவர்கள் அரசு உதவி பெறும், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில்  கூடுதலாக  சேர்ந்துள்ளனர்.

By

Published : Oct 18, 2019, 3:32 PM IST

Tamil Nadu School education

கடந்த சில ஆண்டுகளாகவே அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். அந்த வகையில் அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 2018-2019 கல்வியாண்டில் அரசு கல்லூரியில் 92 ஆயிரத்து 943 மாணவர்களும், 2018-19 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 90 ஆயிரத்து 150 மாணவர்களும், 2018-2019 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 20 ஆயிரத்து 692 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.

2019-20 நடப்பு கல்வியாண்டில் அரசு கல்லூரியில் 1 லட்சத்து 2ஆயிரத்து 98 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கூடுதலாக 9ஆயிரத்து 955 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 91ஆயிரத்து 459 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் 1309 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 22ஆயிரத்து 644 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் 1,952 மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர்.

மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறித்து கருத்து விளக்கமளிக்கும் கல்லூரி கல்வி இயக்குநர், ’தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவர்களின் சதவீதம் அதிகம். தற்போது 49 சதவீதமாக தமிழ்நாட்டின் உயர்கல்வி சதவீதத்தை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதும்; மாணவர் சேர்க்கை அதிகரிக்க காரணமாக தெரிவிக்கின்றனர்.

மேலும், தனியார் கல்லூரிகளிலேயே சிறந்த கல்வி கிடைக்கும் என்கிற தோற்றம் மறையத் தொடங்கி, அரசு கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது' என்றார்.

இதையும் படிங்க:

'யாராக இருந்தாலும், வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தால் நல்லது' - அமைச்சர் ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details