சென்னை:வாழ்வுச் சான்றிதழை அளிப்பதற்கு ஓய்வூதியதாரா்கள் பின்பற்ற வேண்டிய நோ்காணல் நடவடிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்தில் ஆண்டுதோறும் வாழ்வுச் சான்றிதழை சமர்ப்பிக்க வேலை நாளில் வர வேண்டும்.என்ற உத்தரவைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "ஓய்வூதியதாரா்கள் தங்களது உயிா்வாழ்வை உறுதி செய்வதற்கான வாழ்வுச் சான்றை அளிக்க ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பா் வரை மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்படும். இணைய சேவை மையங்கள், அஞ்சல் வழி, கருவூல கணக்குத் துறையில் நேரடியாக சமா்ப்பித்தல் உள்ளிட்ட வழிகளில் வாழ்வுச் சான்றிதழை அளிக்கலாம். உயிா் வாழ்வுச் சான்றை அளிக்க வெவ்வேறு முறைகளில் வசதிகள் இருந்தாலும், ஜூலை முதல் ஆகஸ்ட் என்ற கால அளவு தொடர்ந்து நடைமுறையிலிருந்து வருகிறது.
வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியதாரர்கள் அந்நாட்டிலுள்ள மாஜிஸ்டிரேட், நோட்டரி, வங்கி மேலாளர் அல்லது இந்தியத் தூதரக அதிகாரியிடம் வாழ்வுச்சான்று பெற்று, சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். வருமானவரி செலுத்த வேண்டியவர்கள் நடப்பு நிதியாண்டுக்கான தோராயமான வருமான வரி அறிக்கையினை, ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
ஓய்வூதியம் வழங்கும் பணி கணினிமயமாக்கப்படுவதால், தகவல் தொடர்பிற்கும், வருமான வரி பிடித்தம் குறித்த விபரங்களைத் தாக்கல் செய்வதற்கும் வசதியாக தற்போதைய இருப்பிட முகவரி, தொலைபேசி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, வருமான வரி கணக்கு எண் ஆகிய விபரங்களையும் அளிக்குமாறு கூறப்படுகிறது.