சென்னை: திருச்சியில் மே 5ஆம் தேதி நடைபெற்ற 39ஆவது தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களது குடும்பத்திற்கு குடும்பநல உதவித் தொகை ரூ.1,00,000 லிருந்து இனிவரும் காலங்களில் ரூ.3.00.000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.
இதனையடுத்து, வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராகப் பதிவு பெற்றுள்ள வணிகர்களுக்குக் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உள்பட்டு குடும்ப நல உதவித் தொகை உயர்த்தி வழங்க அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராகப் பதிவு பெற்று குறைந்தது ஓர் ஆண்டாவது உறுப்பினராக இருத்தல் வேண்டும்.