தமிழ்நாட்டில் கரோனா, ஒமைக்ரான் தொற்று பாதிப்பு தீவிரமாகப் பரவிவருகிறது. இதனையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாகத் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிப்பில் உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படும் எனவும் உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மூலம் டெலிவரி செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.