சென்னை: கடந்த ஆண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கரையை கடந்த நிவர் மற்றும் புரெவி புயலால் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.
முன்னதாக தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் பாதிப்புகளுக்கு நிதி வழங்கப்பட்டது. அதில் தமிழ்நாட்டிற்கு 2020 ஆம் ஆண்டு நிவர் புயலின் பாதிப்புக்காக ரூ.63.14 கோடியும், 2020 புரெவி புயலின் பாதிப்புக்காக ரூ.223.77 கோடியுமாக மொத்தம் ரூ.286.91 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.