தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

RN Ravi: திமுக அரசு மீது விஷத்தை கக்கும் ஆளுநர்: கே.எஸ்.அழகிரி விளாசல்! - tamil nadu congress president ks alagiri

தமிழகத்தின் அரசியல் பாரம்பரியத்தைப் பற்றி சிறிதும் அறியாத ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, திமுக அரசு மற்றும் கொள்கைகளை குறித்து பேச என்ன யோக்கியதை இருக்கிறது? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

By

Published : May 5, 2023, 8:05 AM IST

சென்னை: தமிழகத்தில் நீண்ட நாட்களாக ஆளும் திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் சட்டமன்ற மசோதா குறித்தும், கொள்கைகள் குறித்தும் தொடர்ந்து மோதல் போக்குவது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆளுநர் ரவி நேற்று முன்தினம் தனியார் இதழுக்கு அளித்த பேட்டியில், "திராவிட மாடல் என்பது காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது என்றும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை அறிந்தும் நான் எப்படி சட்டப்பேரவையில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று கூற முடியும் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து திமுக அரசை விமர்சனம் செய்துள்ளார்.

இதற்கு திமுக கூட்டணியான கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் அரசியல் பாரம்பரியத்தைப் பற்றி சிறிதும் அறியாத ஆளுநர் ரவிக்கு, அது குறித்து பேச என்ன யோக்கியதை இருக்கிறது? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சாசனத்தை மீறி சர்ச்சை கருத்துகளை சொல்வதை தொழிலாகவே கொண்டுள்ளார். சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மீண்டும் விஷத்தை கக்கியுள்ளார். திராவிட மாடல் என்பது செத்துப்போன வெற்றுக் கோஷம் என்றும் ஒரே பாரதம் கொள்கையை போன்றது அல்ல என்றும் பா.ஜ.க. தலைவராகவே மாறி உளறியிருக்கிறார்.

ஒரு அரசியல் கட்சியின் கொள்கையை பற்றி பேச இவர் என்ன அரசியல் தலைவரா? இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? தமிழகத்தின் அரசியல் பாரம்பரியத்தைப் பற்றி சிறிதும் அறியாத ஆளுநர் ரவிக்கு,அது குறித்து பேச என்ன யோக்கியதை இருக்கிறது?. சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட இருந்தோம். அவர் உடனே ஒப்புதல் அளித்ததால் கண்டனப் போராட்டமாக நடத்தினோம்.

தி.மு.கவின் கொள்கை என்பது மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி. மாநில நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கிற இயக்கம். ஆனால், ஆளுநர் கூறகிற ஒன்றே பாரதம், ஒரே நாடு என்பது பா.ஜ.க.வின் கொள்கை. இந்தியாவில் அனைத்திலும் ஒற்றைத் தன்மையையும், ஒற்றை ஆட்சியையும் நோக்கமாகக் கொண்டது. மத்தியில் அதிகாரக் குவியலை வளர்க்கிற இயக்கம் பா.ஜ.க. இந்த இரண்டிற்கும் இருக்கிற வித்தியாசத்தை புரிந்து கொள்ளாமல் ஆளுநர் விதண்டாவாதம் பேசியிருக்கிறார். அரசியல் சாசன பதவியில் இருக்கும் ஆளுநர் தொடர்ந்து வரம்பு மீறிக்கொண்டிருக்கிறார். அனைவரும் ஓரணியில் திரண்டு ஆளுநரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி விட்டது" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஒரு மாதம் கெடு விதித்த நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details