தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 5, 2023, 1:16 PM IST

ETV Bharat / state

"சீமான், பாஜக தான் வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினைக்கு காரணம்" - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!

பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தான் வடமாநில தொழிலாளர்கள் தாக்குதல் குறித்து வதந்தி பரப்பியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கே எஸ் அழகிரி
கே எஸ் அழகிரி

சென்னை:ராயப்பேட்டையில் உள்ள சத்யமூர்த்தி பவனில் மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வெ.கி. சம்பத்தின் 98-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டு இருந்த ஈ.வெ.கி. சம்பத்தின் திருஉருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, "ஈ.வெ.கி. சம்பதின் பேச்சாற்றல் மற்றும் உழைப்பிற்கு நிகரானவர்கள் யாரும் இல்லை என்பதே எனது கருத்து. கல்லூரி காலத்தில் அவர் பேச்சைக் கேட்பதற்காக அலைந்து திரிந்து இருக்கிறேன். அவர் அழுத்தம் திருத்தமாகவும் எந்த இடத்தில் எதை பேச வேண்டும் என்ற பேச்சாற்றலை உடையவர்.

அவரைப் போல பேச வேண்டும் என ஆசைப்பட்டேன். இன்றைக்கு ஓரளவுக்கு நான் பேசுவதற்கு காரணம் என்னுடைய குருநாதர் சம்பத் அவர்கள் தான். வட மாநில தொழிலாளர்களை குறித்து ஒரு சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர். குறிப்பாக பிஜேபி, ஆர் எஸ் எஸ் மறைமுகமாக செய்கிறார்கள். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளிப்படையாக செய்கிறார். இவர்கள் இரண்டு பேர் தான் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பின்றி தாக்கப்பட்டதாக வதந்தி பரவுவதற்கு காரணம்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய விளம்பரத்திற்காக தமிழக மக்களுக்கும், வட இந்தியர்களுக்கும் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். வேண்டும் என்றே திட்டமிட்டு இது போன்று செய்திகளை பரப்பி வருகிறார். தொழிலாளர்களுக்கு மாநிலம், ஜாதி, மொழி என எதுவும் கிடையாது.

அவர்களுக்கு கை உண்டு, கால் உண்டு, வயிறு உண்டு ஒருவேளை சோற்றுக்காக இங்கே உழைக்க வருகிறார்கள். சீமான் பேச்சு அவருக்கு தண்டனை கொடுக்கும் அளவிற்கு இருக்கிறது. சிங்கப்பூர் போன்ற இடங்களில் நம் தமிழக மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு எதிராக இது போன்று பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பார்த்துக் கொண்டு நாம் சும்மா இருப்போமா?.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்னதுதான் தமிழ் மரபு. எனவே தமிழக அரசு உடனடியாக அம்பு எய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினைக்கு 10 ஆண்டுகளாக சீமான் தான் காரணம். ரயில்வே மற்றும் வங்கியில் பணி செய்பவர்கள் வேறு. தொழிலாளர்கள் பணி வேறு. 10 வருடங்களாக ஒரு விஷயத்தை பேசி வந்தால் அது நியாயமாகுமா" எண்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

இதையும் படிங்க:போலி டாக்டர் பட்டம் விவகாரம்: தலைமறைவாக இருந்த ஹரிஷ் கைது!

ABOUT THE AUTHOR

...view details