தமிழ்நாடு

tamil nadu

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம்!

By

Published : Aug 9, 2022, 3:46 PM IST

முல்லைப்பெரியாறு அணையின் அருகில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கேரளா முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம்
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம்

சென்னை: 'முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், அந்த அணையிலிருந்து விதிகளின்படி தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும், அணைக்கு அருகில் வசிக்கும் கேரள மக்களின் பாதுகாப்பினை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்’ எனவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதற்கு ஸ்டாலின் எழுதியிருந்த பதில் கடிதத்தில், 'நேற்று (ஆகஸ்ட் 8) காலை 7.00 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 138.85 அடியாகவும், சராசரி நீர்வரத்து 6942 கன அடியாகவும், கசிவுநீர் வெளியேற்றம் சுமார் 5000 கன அடியாகவும் உள்ளது. இது அங்கீகரிக்கப்பட்ட விதி வளைவுடன் முழு இணக்கத்துடன் செய்யப்படுகிறது.

எனவே, முல்லைப் பெரியாறு அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சரியான நேரத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் எங்கள் அணை நிர்வாகக்குழு மிகுந்த கவனம் செலுத்துகிறது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். அணையின் பொறுப்பில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும், உங்கள் முடிவில் உள்ள அலுவலர்களுடன் தொடர்ந்து தொடர்புகொள்ளவும் போதுமான அளவு அறிவுறுத்தப்பட்டுள்ளது' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:மின்சார திருத்த சட்ட மசோதா பாதுகாப்பு இல்லாதது - அமைச்சர் செந்தில் பாலாஜி

ABOUT THE AUTHOR

...view details