தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவ நிபுணர் குழு 75 விழுக்காடு பணியாற்ற அரசு அனுமதித்துள்ளது. மேலும் அவர்களுக்கான பேருந்து வசதிகளை அதிகப்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். ஏற்கனவே செவ்வாய்க்கிழமை (மே 26) அன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு இருந்தார். ஒரு வாரத்தில் இரண்டு முறை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை செய்வது இதுவே முதல் முறை.