தமிழ்நாடு அரசு சின்னங்களாக திருவில்லிபுத்தூர் கோபுரம், பனைமரம், வரையாடு, மரகதப்புறா, செங்காந்தள் மலர், பலாப்பழம், பரதநாட்டியம், கபடி ஆகியவை உள்ளன.
அரசிதழில் வெளியானது தமிழ்நாட்டின் மற்றொரு சின்னம்! - தமிழ்நாட்டின் புதிய சின்னம்
சென்னை : தமிழ் மறவன் பட்டாம் பூச்சி இனத்தை தமிழ்நாடு அரசு சின்னமாக அறிவித்தது அரசிதழலில் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் புதிய சின்னமானது தமிழ் மறவன் பட்டாம்பூச்சி
இந்நிலையில், தமிழ் மறவன் பட்டாம் பூச்சி இனத்தை (அறிவியல் பெயர்: கிற்றோ சோர்ரா தைஸ்) தமிழ்நாடு சின்னங்களில் ஒன்றாக அறிவிக்க முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின பாதுகாவலர் ஆகியோர் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்தனர்.
அந்தப் பரிந்துரையை பரிசீலனை செய்து தமிழ் மறவன் பட்டாம் பூச்சி இனத்தை, தமிழ்நாடு அரசு சின்னமாக அறிவித்து சுற்றுச்சூழல், வனத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் உத்தரவிட்டார். இந்நிலையில், அந்த அரசாணை தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.