தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வாரியர்ஸை கவுரவித்த தாம்பரம் ரயில் நிலையம்

சென்னை: தாம்பரம் ரயில் நிலையம் முகப்பு பகுதியில் கரோனா வாரியர்ஸை கவுரவிக்கும்விதமாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

By

Published : May 1, 2020, 11:16 AM IST

Tambaram Railway Station honoring Corona Warriors with paintings
Tambaram Railway Station honoring Corona Warriors with paintings

நாடு முழுவதும் கரோனா தீநுண்மி பரவிவருவதையடுத்து, இந்தத் தீநுண்மி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டுகின்றன. அதுமட்டுமின்றி சமூகச் செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் எனப் பலரும் நெடுஞ்சாலைகளில் கரோனா தீநுண்மி ஓவியம் வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர்.

கரோனா வாரியர்ஸை கவுரவித்த தாம்பரம் ரயில் நிலையம்

இந்நிலையில் சென்னை தாம்பரம் ரயில் நிலையம் முகப்பு பகுதியில் தன்னார்வலர்கள், காவல் துறையினர், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களின் களப் பணிகளை எடுத்துக்காட்டும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

தொடர்ந்து ஐந்து நாள்களாக தன்னார்வலர்கள் இந்த ஓவியத்தினை வரைந்துள்ளனர். கரோனா தொற்று பரவுவலிருந்து பொதுமக்களைக் களப்பணியாற்றி கரோனா வாரியர்ஸ் காப்பாற்றுவதுபோல இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இதையும் பார்க்க: கரோனா விழிப்புணர்வு ஓவியம்!

ABOUT THE AUTHOR

...view details