தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிலம்பம் போட்டி; நேபாளம் செல்லும் மாணவர்களுக்கு காவல் ஆணையர் ரவி நிதியுதவி

சென்னை கண்ணகி நகரில் இருந்து சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ள நேபாளம் செல்லும் மாணவர்களுக்கு தாம்பரம் காவல் ஆணையர் ரவி நிதியுதவி வழங்கினார்.

By

Published : Apr 1, 2022, 11:56 AM IST

தாம்பரம் காவல் ஆணையர் நிதியுதவி
தாம்பரம் காவல் ஆணையர் நிதியுதவி

சென்னை:கண்ணகி நகரில் வசிக்கும் பள்ளி மாணவர்கள் அம்பேத்கர் இரவு பாட சாலையில் பயின்று வருகின்றனர். இங்கு சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் கற்றுத் தரப்படுகின்றன. இங்கு பயிலும் ராஜலட்சுமி, எலிஷா, ரோஷினி, சஞ்சய், சந்தியா உள்ளிட்ட 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஏப்ரல் 2ஆம் தேதி நேபாளம் நாட்டில் நடைபெறும் சிலம்பம் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்தப் போட்டிக்கு செல்லவிருக்கும் மாணவ- மாணவிகளுக்கு தாம்பரம் காவல் ஆணையர் ரவி மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் தலா 15,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. பின்னர் மாணவர்கள் தங்கள் சிலம்ப திறமையினை வெளிப்படுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் ரவி, "கண்ணகி நகர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விடியல், வெளிச்சம், உதயம் திட்டங்கள் கொண்டு வரப்படும். அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்டவை மேம்படுத்தப்படும்" என்றார்.

தாம்பரம் காவல் ஆணையர் நிதியுதவி

அதன் பிறகு கண்ணகி நகர் காவல் நிலையம் அருகே மாணவர்களுக்கு விளையாட கட்டப்பட்டு வரும் மைதானத்தை அவர் பார்வையிட்டார். மைதானத்தை பார்வையிட்டதை தொடர்ந்து காவல் துறையினர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென காவல் ஆணையர் ரவி கண்ணகி நகர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது சரித்திர பதிவேடு பட்டியலை எடுத்துப்பார்த்து விட்டு 'ஏ பிளஸ்' கேட்டகரியில் உள்ள ரவுடிகளின் விவரங்களை ஆய்வாளரிடம் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க:சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை - டிஜிபி சைலேந்திரபாபு

ABOUT THE AUTHOR

...view details