ரூ.656 கோடி பாக்கி வைத்துள்ள கரும்பு விவசாயிகளுக்குஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடமிருந்து அந்தத் தொகையை பெற்று தரக்கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தி ஆணையர், கரும்புத் துறை ஆணையர் ஆகியோரை சந்தித்து மனு அளித்தார்.
இதைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'கடலூர் மாவட்டத்தில் இயங்கும் ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கடந்த 30 மாதங்களுக்கு முன்பு கடலூர், தஞ்சையில் உள்ள கரும்பு விவசாயிகள் சுமார் 14 லட்சம் டன் கரும்புகளை அரவைக்காக கொடுத்துள்ளனர். அப்படி கொடுக்கப்பட்ட கரும்புக்கு அந்த நிறுவனம் இதுவரை ரூ. 556 கோடி பாக்கி வைத்துள்ளது.