சென்னை:நங்கநல்லூர் பகுதியில் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்னை மாநகராட்சிப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொள்ள சென்றார். அப்போது பள்ளி மாணவர்கள் கேட்டிற்கு வெளியே நிற்பதைப் பார்த்தார். தாமதமாக வந்த மாணவர்கள் பள்ளிக்கு வெளியே நிற்கவைக்கப்பட்டு இருந்தனர்.
அவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே சென்ற அமைச்சர் 'தாமதமாக பள்ளிக்கு வந்தாலும் மாணவர்களை வெளியே நிற்க வைக்காமல் பள்ளிக்கு உள்ளே காத்திருக்க செய்யுமாறு' ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினார்.