தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நேத்ராவை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்- ஆளுநர் பன்வாரிலால் - governor panwarilal prohit

சென்னை: ஏழைகளுக்காக தனது பணத்தை வழங்கிய மதுரை சிறுமி நேத்ராவை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் பன்வரிலால் புரோகித் கூறியுள்ளார்.

students should follow madurai child nethra said governor panwarilal prohit
students should follow madurai child nethra said governor panwarilal prohit

By

Published : Jun 6, 2020, 11:48 PM IST

Updated : Jun 7, 2020, 1:18 AM IST

மதுரையைச் சேர்ந்த மோகன் என்ற முடிதிருத்தும் தொழிலாளி, தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை ஏழைகளுக்காக வழங்கியிருந்தார். இச்செயலினை பிரதமர் நரேந்திர மோடி மனதில் குரல் உரையில் குறிப்பிட்டு பாராட்டியிருந்தார்.

இதையடுத்து அமைதி, முன்னேற்றத்துக்கான உலக நாடுகளின் கூட்டமைப்பான (UNADAP- United Nations Association for Development And Peace) என்றநிறுவனம் நேத்ராவை ஏழைகளுக்கான தூதராக அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முடி திருத்தும் தொழிலாளி மோகன், அவரது மகள் நேத்ராவின் இந்த தன்னலமற்ற சேவையை பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.

யுஎன்ஏடிஏபி தொண்டு நிறுவனம் நேத்ராவை ஏழைகளுக்கான தூதராக அறிவித்துள்ளது தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கும். இது போன்ற செயலை செய்ய மிகப் பெரிய மனது தேவை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கரோனா தொற்று பரவி வரும் சூழலில் மாணவர்கள் நேர்தாவின் வழியை பின்பற்றி மற்றவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: 'அடித்தட்டு மக்களின் குரல் ஐநாவில் எதிரொலிக்கும்' - நெகிழ்ச்சியில் நேத்ரா!

Last Updated : Jun 7, 2020, 1:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details