தமிழகத்தில் உள்ள 479 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 67ஆயிரத்து 101 இடங்கள் உள்ளன. இதனை நிரப்புவதற்கு, ஜுலை 3ஆம் தேதி முதற்கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது. இதுவரை மூன்று கட்டமாக பொறியியல் கலந்தாய்வு முடிவுற்றுள்ளது. இதில், பல பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இல்லாமல் உள்ளன.
மொத்தமுள்ள 1 லட்சத்து 67ஆயிரம் இடங்களில், 46 ஆயிரம் இடங்கள் மட்டுமே இதுவரை நிரம்பியுள்ளன. 35 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.15 கல்லூரிகளில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளனர். 80 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 212 பொறியியல் கல்லூரிகளில் 10 விழுக்காடுக்கு குறைவாக மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.