தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'போன் எடுக்க இவ்வளவு நேரமா?' என கேட்ட தாய் - மனமுடைந்த மகள் தூக்கிட்டுத் தற்கொலை - chennai district news

போன் அழைப்பை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது தொடர்பாக தாய் திட்டியதால், மனமுடைந்த மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘போன் எடுக்க இவ்வளவு நேரமா?’ - மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை
‘போன் எடுக்க இவ்வளவு நேரமா?’ - மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை

By

Published : Dec 19, 2022, 4:04 PM IST

சென்னை: குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிகாம் படித்து வந்தவர், ஸ்ரீமதி (18). இவர் படித்து வந்த கல்லூரி விடுதியில் உணவுகள் சரியாக இல்லை எனக் கூறிய நிலையில், மயிலாடுதுறையில் இருந்த ஸ்ரீமதியின் பெற்றோர் குரோம்பேட்டை பகுதியில் மகளுடன் வசித்து வந்தனர்.

நேற்று (டிச.18) சொந்த ஊரில் இருந்த வீட்டினை காலி செய்வதற்காக, மயிலாடுதுறைக்கு ஸ்ரீமதியின் பெற்றோர் சென்றுவிட்டனர். இந்த நிலையில் ஸ்ரீமதியின் செல்போனுக்கு 4 முறை தொடர்புகொண்ட பெற்றோரின் அழைப்பை, ஸ்ரீமதி எடுக்கவில்லை. பின்னர், சிறிதுநேரம் கழித்து, ஸ்ரீமதி அவரின் அம்மாவுக்குத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, “எப்போதும் மொபைல் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறாய். ஆனால், நாங்கள் கால் செய்தால் மட்டும் எடுக்க உனக்கு இவ்வளவு நேரம் ஆகிறது” என கண்டித்துள்ளார். இதனையடுத்து பேசிக் கொண்டே இருந்த ஸ்ரீமதி போனை கட் செய்துள்ளார். பின்னர் பலமுறை கால் செய்தும் ஸ்ரீமதி போன் எடுக்காததால், சந்தேகம் அடைந்த அவரது தாய் வீட்டின் அருகில் உள்ள நபருக்கு கால் செய்துள்ளார்.

இதனையடுத்து ஸ்ரீமதி இருந்த வீட்டுக்குச்சென்ற அருகில் இருந்தவர், அங்கு அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கண்டதைப் பார்த்துள்ளார். பின்னர் இதுகுறித்து அறிந்த சிட்லப்பாக்கம் காவல் துறையினர், உயிரிழந்த ஸ்ரீமதியின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை தவிர்

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கல்லூரியில் தேர்வு நடந்து கொண்டிருப்பதால், விதிமுறைகளை மீறி கல்லூரிக்கு மொபைல் எடுத்து வந்த ஸ்ரீமதியிடம் இருந்து மொபைலை வாங்கிய கல்லூரி நிர்வாகத்தினர், ஸ்ரீமதியின் தாய்க்கு போன் செய்து எச்சரித்த பின்னர் மொபைலை ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பால்கனியில் இருந்து மகனை தூக்கிவீசி, தந்தையும் தற்கொலை முயற்சி.. காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details