தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி அனுமதி சீட்டை வைத்து வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை! - போலி அனுமதி சீட்டு தண்டனை

சென்னை: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர், போலி அனுமதி சீட்டை வைத்து வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

curfew-in-chennai
curfew-in-chennai

By

Published : Jun 18, 2020, 7:14 AM IST

சென்னையில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், ஜூன் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதனால் போக்குவரத்து காவல்துறை, பல்வேறு விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது. அதில், "அத்தியாவசிய தேவைகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.

மேலும், மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே ஆட்டோ, டாக்ஸி, இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். குறிப்பாக அத்தியாவசிய பொருள்களை வாங்க செல்லும் பொதுமக்கள் வாகனங்களை பயன்படுத்தக்கூடாது.

மளிகை, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க இரண்டு கி.மீ. தொலைவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். உணவு டெலிவரி, வங்கி, பால் வினியோகம், பெட்ரோல், சரக்கு வாகனங்கள், சமயல் எரிவாயு ஊழியர்கள் வாகனங்களை ஓட்ட அந்தந்த நிறுவனங்களிடமிருந்து முறையான அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக ஜூன் 21, 28ஆம் தேதிகள் அன்று தளர்வுகள் ஏதுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் வாகனங்களை தவிர மற்ற எந்த வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது.

அடையாள மற்றும் அனுமதி அட்டையை A5 அளவில் நகல் எடுத்து வைத்துக் கொண்டு காவலர்களிடம் முறையாக காண்பிக்க வேண்டும்.

அனுமதி சீட்டு இல்லாமல் வாகனங்களில் சுற்றினால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். போலி அனுமதி சீட்டுகளை வைத்து கொண்டு வாகனத்தில் சுற்றுபவர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டம் 144 பிரிவுகளின் படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளபடும்" எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் முதியோர், மாற்று திறனாளி, தொண்டு நிறுவன ஊழியர்கள் வாகனங்களுக்கு அனுமதி உண்டு. அவர்கள் வாகனங்களில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அதுதொடர்பான சந்தேகங்களுக்கு 044 23452330 மற்றும் 90031 30103 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் முழு ஊரடங்கு - காவல் துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details