தமிழ்நாடு

tamil nadu

அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு

By

Published : Nov 2, 2020, 3:08 PM IST

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர் மீது கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

High court
High court

கோவையைச் சேர்ந்த திமுக நிர்வாகி தேவராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார். அதில், "கோவை மாவட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு மக்களிடம் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி அவதூறு பரப்பும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இந்தப் போஸ்டரை அச்சடித்த அச்சகத்தின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களும் இல்லாமல் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது சட்டவிரோதமானது என்றும் எனவே இந்தப் போஸ்டர்களை ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அக்டோபர் 25ஆம் தேதி கோவை காவல் துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டும் இதுதொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் போஸ்டர் ஒட்டப்பட்டதைக் கண்டித்து இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டம் குறித்து உதவி ஆய்வாளர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படாமல் நடுநிலையோடு பாரபட்சமின்றி காவல் துறை செயல்பட வேண்டும் எனக் காவல் துறை டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் போஸ்டர் ஒட்டிய விவகாரம் தொடர்பாக அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஏற்கனவே கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details