தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 20, 2022, 2:26 PM IST

Updated : Jun 20, 2022, 5:31 PM IST

ETV Bharat / state

ஐஐடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

ஐஐடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

ஐஐடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்
ஐஐடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்

சென்னை: சென்னை ஐஐடியில் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கான STEM என்ற கோடைகால பயிற்சி திட்டத்தை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதத்தில் நூறு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக சென்னை ஐஐடி சார்பில் ஜூன் 20 முதல் 25ஆம் தேதி வரை பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிராமப்புற அரசுப் பள்ளியின் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 6 நாள் பயிற்சி வகுப்பு சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் இன்று முதல் தொடங்கியுள்ளது.

ஐஐடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்

இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை ஐஐடி சார்பில் துவங்கப்பட்டுள்ள STEM திட்டம் பெருமைக்குறியது.எட்டாக் கனியாக எதுவும் இருந்து விடக்கூடாது என்னும் நோக்கில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் பயிற்சி வழங்கப்படுகிறது என்றார்.

ஐஐடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்

6 நாட்கள் பயிற்சியை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், சென்னை ஐஐடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

'ஐஐடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்'

மாநில கல்விக்கொள்கை தயாரிப்பு குழுவின் கூட்டம் வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது என்றும், குழுவின் ஒவ்வொரு கூட்டத்திலும் மாநில கல்வி கொள்கை வளர்ச்சி அடையும் என கூறினார். கரோனா காலத்திலும் 93% விழுக்காடு தேர்ச்சி பெருமை அளிக்கிறது. நிச்சயம் 100% தேர்ச்சி நோக்கி செல்வோம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க: நாளை முதல் 12ஆம் வகுப்புகள் தொடக்கம்

Last Updated : Jun 20, 2022, 5:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details