தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 11, 2022, 10:29 PM IST

ETV Bharat / state

கோயில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம்கள் கட்டுவதில் அரசு சுணக்கம் - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

கோயில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம்கள் கட்ட 308 கோடி ரூபாய் ஒதுக்கியும், ஒரே ஒரு ஸ்ட்ராங் ரூம் மட்டும் கட்டப்பட்டுள்ளதால் துறை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

States
States

சென்னை: தமிழ்நாட்டில் கோயில்கள் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில், சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம்கள் கட்ட வேண்டும், அறங்காவலர்களை நியமிக்க வேண்டும், கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும், கோயில் நிலங்களுக்கு வாடகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 75 உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் கோயில்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (நவ.11) மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவின்படி எத்தனை கோயில்களில் ஸ்ட்ராங் ரூம்கள் கட்டப்பட்டுள்ளன என நீதிபதிகள், அறநிலையத்துறை தரப்புக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு, ஒரு ஸ்ட்ராங் ரூம் கட்டப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் பதில் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, கோயில்களில் ஸ்ட்ராங் ரூம் கட்ட கடந்த 2018ஆம் ஆண்டு 308 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும், ஒரே ஒரு அறை மட்டும் கட்டப்பட்டுள்ளதா? என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஒவ்வொரு சிலையும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலானது எனவும் ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ள நிலையில் அத்தனை சிலைகளுக்கும் ஒரு ஸ்ட்ராங் ரூம் போதுமா? எனவும் கேள்வி எழுப்பினர்.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்காக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் அறநிலையத்துறை செயலாளரை ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர். பின்னர், ஸ்ட்ராங் ரூம்கள் கட்டப்பட்டது தொடர்பாக விளக்கமளிக்க அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:சிறார் வழக்குகளுக்கு விதிமுறைகள் - சென்னை உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details