தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னையில் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியாக அமைக்கப்பட்ட சித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆயிரத்து 50க்கும் மேற்பட்டவர்களுக்கு சித்த மருந்துகள் கொடுக்கப்பட்டு அவர்களில் 750-பேர் முழுமையாக நலம் பெற்றுத் திரும்பியுள்ளனர்.
தற்போது 300 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என அம்மருத்துவமனையின் மருத்துவர் வீரபாபு அறிவித்திருக்கும் செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது.