திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகளின் மறு எண்ணிக்கை நீதிமன்ற பதிவாளர் குமரப்பா முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது. 19, 20, 21 ஆகிய சுற்றுகளின் மின்னணு வாக்குகள், அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் மறு எண்ணிக்கை நிறைவு
சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவின்படி ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான மின்னணு வாக்குகள், அஞ்சல் வாக்குகள் ஆகியவற்றை எண்ணும் பணிகள் நிறைவடைந்தது.
முதலில் அஞ்சல் வாக்குகளும் பின்னர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். செல்லாது என அறிவிக்கப்பட்ட 203 அஞ்சல் வாக்குகள் மட்டுமல்லாது மொத்தம் பதிவான 1,508 அஞ்சல் வாக்குகளும் எண்ணப்படுகின்றன.
34 வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள், அஞ்சல் வாக்குகள் என 16 ஆயிரத்து 83 வாக்குகளும் மீண்டும் எண்ணப்படுகின்றன. 17 மேசைகள் அமைத்து இரண்டு சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வந்த வாக்கு எண்ணிக்கை தற்போது நிறைவடைந்தது.