அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் சொற்குவை மாணவத் தூதுவர் பயிற்சி நிறைவு விழா விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “10 ஆயிரம் மாணவர்கள் சொற்குவை இணையதளத்தில் சேர்ந்துள்ளார்கள். இதுவரை தமிழில் மூன்று லட்சத்து 96 ஆயிரம் சொற்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 19 ஆயிரம் புது சொற்களுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சியைப் பொறுத்தவரை அடுத்த வாரத்தில் முதலமைச்சர் ஒரேநாளில் 7 இடங்களில் காணொலி காட்சி வாயிலாகத் திறந்துவைக்க இருக்கிறார். 29 தொல்லியல் வல்லுநர்கள் இருக்கும் இடம் தமிழ்நாடுதான். மேலும் பழைய ரிப்போர்ட் விரைவில் வெளியிடப்படும்.
பயிர்க்கடன்... அடுத்து கல்விக்கடனா?