தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் பயிற்சி மையத்தில் வருமானவரித்துறை சோதனை: ஸ்டாலின் ட்வீட்! - வருவானவரித்துறை சோதனை

சென்னை: நீட் பயிற்சி மையங்களில் தொடர்ந்து வருமானவரித்துறையினரால் கைப்பற்றுப்பட்டு வரும் பணம் குறித்தும், நீட் தேர்வால் எவ்விதமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

ஸ்டாலின்

By

Published : Oct 12, 2019, 8:16 PM IST

இந்தியாவில் நீட் தேர்வு மூலமாக மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடியும் என்ற விதி மூன்று ஆண்டுகளாக அமலில் உள்ளது. இதனால் கடந்த சில வருடங்களாக நீட் தேர்வுக்கு பயிற்சியளிக்கும் மையங்கள் இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நீட் பயிற்சி மையங்கள் முக்கிய தொழிலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு மாநிலங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இதில் கர்நாடகாவில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.100 கோடிக்கும் மேல் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.150 கோடிக்கும் மேலான பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீட் தேர்வு அமலுக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் நீட் பயிற்சி மையங்களின் வருவாய் பெருவாரியாக அதிகரித்துள்ளது என்பது தெளிவாகிறது. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

அதில், ஊழல் மற்றும் வரிஏய்ப்பு செய்பவர்கள் நீட் தேர்வின் மூலம் பல்வேறு வகைகளில் பலனடைந்து வருகின்றனர். இதனால் மருத்துவம் படிப்பில் சேரவேண்டுமென்ற கனவோடு படிக்கும் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

தற்போது இந்த வருமான வரித்துறையினரின் சோதனை நீட் தேர்வினை பணக்காரர்கள் மட்டுமே எழுத முடியும் என்பதைக் காட்டுகிறது. மேலும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரான ஒன்றானது என்பது நிரூபணமாகிறது எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே: நீட் பயிற்சி மையத்தில் ஐ.டி. ரெய்டு... முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details