தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 24, 2020, 11:38 PM IST

ETV Bharat / state

தமிழ்நாட்டில் நடைபெறுவது பழனிசாமியின் ஆட்சியா? காவல்துறையின் ஆட்சியா ? - ஸ்டாலின் சாடல்!

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெறுவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியா? அல்லது காவல்துறையின் ஆட்சியா? என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

stalin
stalin

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் சந்தேகத்திற்கிடமான முறையில் சிறையிலேயே உயிரிழந்தனர்.இச்சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தின் கதறல் நெஞ்சை பதறச் செய்கிறது! உடுமலை சங்கரின் ஆணவக்கொலையில் உரிய ஆதாரங்களைச் சமர்பிக்காமல் கடமை தவறியிருக்கிறது காவல்துறை! இது பழனிசாமியின் ஆட்சியா? காவல்துறையின் ஆட்சியா? ஏவல்துறையாக மாறிவிடாமல் பொறுப்பு உணர்ந்து காவல்துறை செயல்பட வேண்டும்! ” எனப் பதிவிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details