ரயில்வே துறையில் தனியாரை புகுத்துவதால் ரயில்வே ஊழியர்கள், பயணிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படுகின்றனர். இதனைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் நிலையில், தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில் எஸ்ஆர்எம்யூ உள்ளிட்ட பல்வேறு சங்க ரயில்வே ஊழியர்கள், ரயில் பயணிகள், வியாபாரிகள், வழக்கறிஞர்கள் என கூட்டாக 100க்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்.
அப்போது அவர்கள் கூறியதாவது, "கரோனா காலத்தில் உணவு பொருள்கள் தடையில்லாமல் கிடைத்திடவும், விலைவாசி உயராமல் இருந்ததற்கு காரணம் ரயில்வே துறை. இந்த துறை அரசிடம் இருந்ததாலும், அதன் ஊழியர்கள் மக்கள் சேவை புரிந்ததாலும்தான் இது சாத்தியமானது.