தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுங்க அதிகாரியாக நடித்த இலங்கையை சோ்ந்த இருவா் கைது - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலைய வளாகத்தில் சுங்க அதிகாரியாக நடித்த இலங்கையை சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டனர்.

இருவா் கைது
இருவா் கைது

By

Published : Aug 15, 2022, 5:58 PM IST

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளாக நடித்த, இலங்கையை சோ்ந்த போலி ஆசாமிகள் இருவா், இலங்கை பெண் பயணிகளிடம் தங்கநகைகளை பறித்துவிட்டு, தலைமறைவானாா்கள். சென்னை விமானநிலைய போலீசாா், சிசிடிவி காட்சிகள் உதவியுடன், போலி சுங்க அதிகாரிகள் இருவரை கண்டுப்பிடித்து, கைது செய்து, அவா்களிடமிருந்து 125 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனா்.

இலங்கையைச் சேர்ந்த பெண்கள் நதிஷா ரோஷினி (47), வசீகா (45). இவர்கள் இருவரும் கடந்த 8 ஆம் தேதி அதிகாலை இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தனர். சுங்கச் சோதனை, குடியுரிமை சோதனை அனைத்தும் முடித்து வெளியில் வந்தனர். அதன் பின்பு மெட்ரோ ரயிலில் சென்னை மண்ணடி செல்வதற்காக விமான நிலைய கார் பார்க்கிங் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது 2 பேர் இந்த பெண்களை நிறுத்தி, நாங்கள் கஷ்டம்ஸ் விஜிலென்ஸ் ஆபீசா்கள் என்று தங்கள் அடையாள அட்டையை காட்டினர். நீங்கள் அதிகநகைகளை அணிந்துள்ளீா்கள். இந்த நகைகளுக்கு டூட்டி கட்டாமல், வெளியில் எடுத்து வந்து விட்டீர்கள். மீண்டும் சுங்க அலுவலகத்திற்கு வந்து, டியூட்டி கட்ட வேண்டும் என்று கூறினா்.

அதோடு நதிஷா அணிந்திருந்த தங்க வளையல்கள் 59 கிராம் கழற்றி வாங்கிக் கொண்டனர். அதோடு இரண்டு பேர்களின் பாஸ்போர்ட்டுகளையும் வாங்கி பரிசோதித்து விட்டு திருப்பி கொடுத்தனா். பின்பு சுங்க அலுவலகத்திற்கு வந்து, டியூட்டி கட்டிவிட்டு, நகைகளை வாங்கிக்கொள்ளுங்கள் கூறிவிட்டு, சென்றனா்.

அவர்கள் உண்மையான சுங்க அதிகாரிகள் என்று கருதிய நதிஷா, டியூட்டி கட்ட பணம் எடுத்துக்கொண்டு விமான நிலைய சுங்க அலுவலகம் சென்றாா். ஆனால் அதிகாரிகள் நாங்கள் உங்களிடம் இருந்து நகைகளை எதுவும் வாங்கவில்லை என்று கூறினா். இப்போது வெளியே சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேர் எங்களிடம் நகைகளை வாங்கினார், என்று கூறினா். ஆனால் அதை உறுதியாக சுங்க அதிகாரிகள் மறுத்து, உங்களை யாரோ ஏமாற்றியுள்ளனா் என்று கூறினா்.

இதையடுத்து நதிஷா, சென்னை விமான நிலைய போலீசில் புகாா் செய்தாா். போலீசாா் வழக்குப்பதிவு செய்து விமான நிலைய காா் பாா்க்கிங் பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா்.

அப்போது நதிஷாவிடம் சுங்க அதிகாரி போல் நடித்து நகைகளை வாங்கும் இருவரின், காட்சிகளை போலீசார் கண்டறிந்தனர். இதை அடுத்து போலீசாா் கடந்த சில தினங்களாக, அந்த இரண்டு மா்ம ஆசாமிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இலங்கையை சோ்ந்த ஆசாமிகளான அவர்கள், பல்லாவரத்தில் தங்கியிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசாா், நேற்று அதிகாலையில் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் இலங்கையைச் சேர்ந்த முகமது நஜ்மீர் (31), செல்லையா அரவிந்தன் (40) என்று தெரிய வந்தது. பின்பு இருவரையும் விமான நிலைய போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினா். அப்போது நதிஷாவிடம் நகைகளை பறித்ததை ஒப்புகககொண்டனா். மேலும் வேறு சில பெண்களிடமும் இதைபோல் தங்க நகைகள் பறித்து தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் இருந்து 125 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

அதன் பின்பு இவர் மீதும் போலியான சுங்க அதிகாரிகளாக நடித்து, விமானங்களில் தனியே வரும் பெண் பயணிகளிடம் நகை பறித்ததாக வழக்கு பதிவு செய்து, சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

இதையும் படிங்க:திமுகவின் திராவிட மாடல் அரசு சிறப்பாக உள்ளது.. கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு

ABOUT THE AUTHOR

...view details