துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்லம்மதுரை செல்வதற்காகசென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அவரை அதிமுக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ”உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இதையடுத்து மதுரைசெல்லும் ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) விமானத்தில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். உள்பட 149 பயணிகள் ஏறி அமர்ந்தனர். விமானத்தை நடைமேடையிலிருந்து ஓடுபாதைக்கு விமானி இயக்க முயன்றார். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அவர் கண்டுபிடித்தார்.