தமிழ்நாடு

tamil nadu

வன உயிரினங்களுக்கு சிறப்பு குழு - வனத்துறை செயலர் உத்தரவு!

By

Published : Jun 18, 2021, 8:25 PM IST

வன உயிரினங்களுக்கு கரோனா தொற்று பரவாமல் தடுக்க சிறப்பு குழு அமைத்து வனத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

வனத்துறை செயலாளர் உத்தரவு
வனத்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: வண்டலூர் உயிரியியல் பூங்காவில் இரண்டு சிங்கங்களுக்கு கரானா தொற்று ஏற்பட்டு உயிரிழந்ததை அடுத்து, உயிரினங்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைத்து வனத்துறை செயலாளர் ஐஏஎஸ் சுப்ரியா சாகு உத்தரவிட்டுள்ளார்

தமிழ்நாடு முழுவதும் உள்ள மிருகக்காட்சி சாலைகள், உயிரியல் பூங்காக்கள், காடுகளில் உள்ள மிருகங்களை கண்காணிக்க மாநில அளவில் ஆறு பேர் கொண்ட குழுவினை அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இக்குழுவில் காடுகள் வனவிலங்கு குறித்து ஆழமான புரிதல் கொண்ட தியோடர் பாஸ்கரன் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உயிருக்கு போராடும் மில்கா சிங்!

ABOUT THE AUTHOR

...view details