தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வில்சன் கொலை வழக்கு: பயங்கரவாதிகளுக்கு உதவியவருக்கு பிணை மறுப்பு! - பயங்கரவாதிகளுக்கு உதவியவருக்கு பிணை மறுப்பு

சென்னை: காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டுகள் சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட ராஜேஷ் என்பவருக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வில்சன் கொலை வழக்கு
வில்சன் கொலை வழக்கு

By

Published : Jan 22, 2020, 8:17 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைச் சோதனைச் சாவடியில் கடந்த 8ஆம் தேதி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக கர்நாடக மாநிலம் உடுப்பியில் அப்துல் ஷமிம், தவுபிக் ஆகிய 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

இதில், பயங்கரவாதிகளுக்கு, சிம்கார்டுகள் சப்ளை செய்ததாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பச்சையப்பன், ராஜேஷ், அன்பரசன், அப்துல் ரகுமான் உள்ளிட்ட ஒன்பது பேரை ‘கியூ’ பிரிவு காவல் துறையினர் கைதுசெய்தனர். இவர்களில் ராஜேஷ், ஜாமீன் கோரி சென்னையிலுள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று நீதிபதி செல்வக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. இதில், ராஜேஷுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து கியூ பிரிவு துணை கண்காணிப்பாளர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், போலியான முகவரி, புகைப்படம், ஆவணங்களை பெற்றுக்கொண்டு பயங்கரவாதிகளுக்கு அதிக விலையில் சிம்கார்டுகளை வழங்கிய ராஜேஷ், தெரிந்தே இந்த குற்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள், பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் சந்தேகத்துக்குரிய நபர்கள் 200 பேருக்கு சிம்கார்டு சப்ளை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதிகள் முகமது அனீப்கான், இம்ரான் ஆகியோர் மேற்கு வங்க மாநிலத்தில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வாங்கி உள்ளதாகவும், அவர்களிடமிருந்து மூன்று துப்பாக்கிகள், 89 தோட்டாக்கள், மடிக்கணினி, செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனால், ராஜேஷுக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும், சாட்சிகளை கலைக்க கூடும், அவர் தலைமறைவாக வாய்ப்புள்ளதால், ராஜேஷுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையின் விளக்கத்தை ஏற்ற நீதிபதி, ராஜேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு எஸ்.ஐ. கொலை: கேரளாவில் சதித்திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details