தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரிய சத்தம் போடக்கூடாது - வேல்முருகனை எச்சரித்த அப்பாவு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெரிய சத்தம் போடக்கூடாது என எம்.எல்.ஏ வேல்முருகனை துணை கேள்விகளின் வாய்ப்பு விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு எச்சரித்தார்.

By

Published : Apr 6, 2023, 4:06 PM IST

பெரிய சத்தம் போடக்கூடாது எனஅவையில் வேல்முருகனை எச்சரித்த அப்பாவு
பெரிய சத்தம் போடக்கூடாது எனஅவையில் வேல்முருகனை எச்சரித்த அப்பாவு

சென்னை: சட்டப்பேரவையில் தீர்மானங்களைத் தொடர்ந்து, அமைச்சர்களின் கேள்வி நேரங்கள் தொடங்கப்பட்ட நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் தீர்மானங்கள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது சுகாதாரத்துறை ரீதியாக கேள்விகள் எழுப்பப்பட்டன.

அப்போது திடீரென குறிக்கிட்டு பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தொடர்ந்து 2 நாட்களாக அவையில் என்னுடைய துணைக் கேள்விகள் மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். அவையில் அவருடைய வாய்ப்பு மறுக்கப்பட்டபோதும், அவைத்தலைவரின் இந்த செயலுக்கு அவர் ஆவேசமாக கத்தினார்.

மேலும் தன்னுடைய துணைக் கேள்விக்கு அனுமதி வழங்கக்கோரி, தமிழக வாழ்வுரிமை பெற்ற தலைவர் வேல்முருகன் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதற்குப் பதில் அளித்து பேசிய சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, வேல்முருகனின் குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரித்து அவையில் இவ்வாறு செய்யக்கூடாது என எச்சரித்தார்.

இதனைத்தொடர்ந்து அவைத்தலைவர் அப்பாவு, “இந்த கூட்டத்தொடரில் வேல்முருகன் முன்னிருக்கையில் அமர்ந்திருப்பதால் அவருக்கு 4 முறை துணைக் கேள்விகள் கேட்பதற்கு அனுமதி அளித்திருக்கிறேன். முன்வரிசையில் உள்ளவர்களுக்கு பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

எதற்கெடுத்தாலும் தங்களுக்கு தான் கொடுக்க வேண்டும் என்று எந்த மரபும் இல்லை. உங்களைப் போல் 20 பேர் கேட்டிருக்கிறார்கள், யாருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நான் தான் முடிவு எடுக்க வேண்டும்” எனக் கூறினார். மேலும் வேல்முருகனை இப்படி மிரட்டும் தோனியில் அவையில் சத்தம் போடக் கூடாது என்றும் எச்சரித்தார்.

இதையும் படிங்க:பாஜக நிறுவன தினம் - பிரதமர் மோடி உரை!

ABOUT THE AUTHOR

...view details