தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அணில் பிரச்னையை விடுங்க..., அணிலை அடிச்சு சாப்பிட்டாச்சு' - கலகலப்பாக பேசிய சபாநாயகர் அப்பாவு - அமைச்சர் செந்தில் பாலாஜி

சட்டப்பேரவையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கும் இடையேயான மின்வெட்டு குறித்த விவாதத்தில், சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு 'கவுன்ட்டர்' அடித்ததால் சட்டப்பேரவையில் கலகலப்பு நிலவியது.

அணில் பிரச்சனைய விடுங்க., அணில அடிச்சு சாப்பிட்டாச்சு - சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு
அணில் பிரச்சனைய விடுங்க., அணில அடிச்சு சாப்பிட்டாச்சு - சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு

By

Published : Apr 26, 2022, 5:04 PM IST

சென்னை: நிர்வாக குறைபாடுகளால் தான் தமிழ்நாட்டில் மின் வெட்டு நிலவி வருவதாகவும், போதுமான அளவிற்கு நிலக்கரி கையிருப்பு வைத்து கொள்வதற்குத் தமிழ்நாடு அரசு தவறிவிட்டது எனவும் அதிமுக எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி சட்டப் பேரவையில் தெரிவித்தார்.

இதற்கு போதுமான அளவு நிலக்கரியை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்குவதில்லை என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, ”கோடை மாதங்களான மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின் தேவை அதிகமாக இருக்கும். திமுக ஆட்சி பொறுப்பேற்றபின்பு தான் மின் வெட்டு அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு, மே மாதம் பொறுப்பேற்றபின் மின் வெட்டு ஏற்பட்டபோது பராமரிப்புக் காரணங்கள் என சொல்லப்பட்டது. அதன்பின் அணிலால் மின் வெட்டு என சொல்லப்பட்டது” என்றார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ”அணில் பிரச்னையை விடுங்க, அணிலை அடிச்சு சாப்பிட்டாச்சு” எனக் கூறினார். அப்போது அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

இதையும் படிங்க: திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இன்னல்களும் வரும் - ராஜந்திரபாலாஜி

ABOUT THE AUTHOR

...view details