தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 3, 2021, 8:11 AM IST

ETV Bharat / state

தொடங்கியது தென்மேற்குப் பருவமழை: பல்வேறு மாவட்டங்களில் கனமழை

சென்னை: தென்மேற்குப் பருவமழை தொடங்கியதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று இடியுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

southwest-monsoon-begins
southwest-monsoon-begins

இந்த ஆண்டின் தென்மேற்குப் பருவமழை இன்று (ஜூன் 3) தொடங்குகிறது. வழக்கமாக ஜூன் முதல் தேதியில் தொடங்கும் மழை சற்று தாமதமாக இன்று தொடங்கியது.

இதையொட்டி ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கன மழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, புதுக்கோட்டை, மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா பரவல் காரணமாக மின்சார வாரிய பராமரிப்புப் பணிகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details