சென்னை கொருக்குபேட்டை ஓஸ்வால் கார்டனில் குடியிருப்பவர் லதா (வயது 47) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் வீட்டில் தனியாக இருக்கும்போது தவறான நோக்கத்தில் வீட்டிற்குள் அத்துமீறி இரு மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர்.
இதனைக் கண்ட அந்தப்பெண் உடனே தனது செல்போனில் உள்ள காவலன் செயலியில் அந்த இரண்டு மர்ம நபர்களை புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்தார். தகவலைப்பெற்ற ஆர்.கே நகர் போலிசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து அந்த இரு மர்ம நபர்களையும் கைது செய்தனர்.