தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவுக்கு நோ என்ட்ரி - களப்பணியாளர்களை கெளரவித்த சமூக ஆர்வலர் - tamil news

சென்னை: திருவேற்காட்டில் ஒருவருக்குக்கூட கரோனா தொற்று ஏற்படாததையடுத்து அப்பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கும், காவலர்களுக்கும் மாலை, சால்வை அணிவித்து சமூக ஆர்வலர்கள் கெளரவித்தனர்.

dsd
sd

By

Published : Apr 25, 2020, 4:13 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கரோனா தொற்று ஏற்படாமலிருக்க சுகாதாரத் துறை, காவல் துறை, தூய்மைப் பணியாளர்கள் தினந்தோறும் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருவேற்காடு பகுதியில் இதுவரை ஒருவருக்குக்கூட கரோனா தொற்று ஏற்படவில்லை. இதையடுத்து கரோனாவுக்க எதிராக போராடும் தூய்மைப் பணியாளர்கள், 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஆகியோர் வேலை செய்யும் இடத்திற்கே சமூக ஆர்வலர் ரமேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று மாலை, சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

களப்பணியாளர்களை கெளரவித்த சமூக ஆர்வலர்

ABOUT THE AUTHOR

...view details