தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை மீதான மானியக்கோரிக்கை இன்று நடைபெற்றது. அப்போது திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மூன்றாம் பாலின மக்களுக்கு திருநங்கைகள் என பெயரிட்டதாகவும், அவர்களுக்கான நலவாரியம் அமைத்ததாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தற்போது திருநங்கைகளுக்கு உறுப்பு அகற்றும் சிகிச்சை அரசு மருத்துவமனையில் செய்ய முடியுமா? அதனை இலவசமாக மருத்துவக் காப்பீடு திட்டத்தில் செய்ய முடியுமா? என சரவணன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.