தமிழ்நாடு

tamil nadu

விமான நிலையத்தில் ரூ.91.50 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

By

Published : Oct 24, 2019, 11:25 PM IST

சென்னை: சர்வதேச விமான நிலைத்திற்குக் கடத்திவரப்பட்ட ரூ. 91.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

gold

சென்னை சர்வதேச விமானநிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்த பரிஜானா (27) என்ற இளம் பெண் பரிசோதனை செய்தபோது அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கக் கட்டிகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 967 கிராம் தங்கத்தை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சோதனை செய்தபோது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த அன்பழகன் கருப்பையா (61), அமீது (37), முகமது சா்ஜூதீன் (30), அப்துல் நசீா் (26), சதக்கதுல்லா (47) ஆகிய ஜந்து பேர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கத்தையும் கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிமிருந்து ஆயிரத்து 343 கிராம் தங்கத்தை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

இது குறித்து ஆறு பயணிகளை கைது செய்து அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.91.50 லட்சம் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஒரேநாளில் சென்னை விமான நிலையத்தில் ரூ.91.50 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details