தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிகரெட் பாக்கெட்டில் மறைத்துக் கடத்தி வந்த 2.75 கிலோ தங்கம் பறிமுதல்; 4 ஆசாமிகள் கைது

துபாய், ரியாத்திலிருந்து சிகரெட் பாக்கெட், பழைய லேப்டாப், உள்ளாடைகளில் மறைத்து கடத்தி வந்த ரூ.1.37 கோடி மதிப்புடைய 2.75 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் 4 பயணிகளைக் கைது செய்தனர்.

சிகரெட் பாக்கெட்டில் மறைத்து கடத்தி வந்த 2.75 கிலோ தங்கம் பறிமுதல்
சிகரெட் பாக்கெட்டில் மறைத்து கடத்தி வந்த 2.75 கிலோ தங்கம் பறிமுதல்

By

Published : Dec 13, 2022, 4:44 PM IST

சென்னை: துபாயில் இருந்து இண்டிகோ மற்றும் ஃபிளை துபாய் ஆகிய 2 பயணிகள் விமானங்கள் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த 2 பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களின் உடைமைகளை சோதனையிட்டனர். உடைமைகளில் பழைய லேப்டாப்புகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தன.

சந்தேகத்தில் அவைகளைப் பிரித்து பார்த்தபோது வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்களிலும், லேப்டாப்களிலும் சிறுசிறு தங்க துண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இரண்டு பயணிகளிடம் இருந்தும் மொத்தம் ஒரு கிலோ 57 கிராம் எடையுள்ள தங்கத் துண்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவைகளின் சர்வதேச மதிப்பு ரூ.57.76 லட்சம் ஆகும். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் இரண்டு பயணிகளையும் கைது செய்தனர்.

இந்த நிலையில் துபாய் மற்றும் ரியாத்தில் இருந்து ஃபிளை துபாய் மற்றும் கல்ஃப் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தன. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சென்னையைச் சேர்ந்த 2 பயணிகளை சந்தேகத்தின் பேரில் முழுமையாக சோதித்தபோது, அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த பார்சல்களில், தங்கப்பசை இருந்ததை கண்டுபிடித்தனர்.

2 பயணிகளிடம் இருந்தும் 1.710 கிலோ தங்கப் பசையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ. 79.29 லட்சம் ஆகும். பின்னர் இரண்டு பயணிகளையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அடுத்தடுத்து நடத்திய சோதனைகளில், ரூ. 1.37 கோடி மதிப்புடைய இரண்டே முக்கால் கிலோ, தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஓட்டிப் பார்ப்பதாக கூறி ரூ.14 லட்சம் பைக்கை ஆட்டைய போட்ட இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details