சென்னை அடையாறு சாஸ்திரி நகர் பகுதியில் குப்பைத் தொட்டியில் உள்ள குப்பைகளை எடுப்பதற்காகத் தூய்மைப் பணியாளர்கள் நேற்று (ஆகஸ்ட் 23) காலை சென்றனர். அப்போது குப்பைத்தொட்டி அருகே ஒரு கவரில் மண்டை ஓடு, கால், கை எனத் தனித்தனியே எலும்புக் கூடாக இருந்தது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தூய்மைப் பணியாளர் சாஸ்திரி நகர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். அத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அங்கிருந்த எலும்புக் கூடுகளைக் கைப்பற்றி, அதன் ஒரு பகுதியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆய்வகக் கூடத்திற்கும், மற்றொரு பகுதியை தடயவியல் ஆய்வகத்திற்கும் அனுப்பிவைத்தனர்.