தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 19, 2023, 8:51 AM IST

ETV Bharat / state

சென்னையில் வருமான வரித்துறை பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வருமான வரித்துறை பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

வருமான வரித்துறை அதிகாரிக்கு பாலியல் சீண்டல்
வருமான வரித்துறை அதிகாரிக்கு பாலியல் சீண்டல்

சென்னை:வருமான வரித்துறையில் இணை ஆணையராக பணிபுரிந்து 35 வயது பெண், ஜனவரி 16ஆம் தேதி அன்று பெற்றோரை வழியனுப்புவற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு 6ஆவது நுழைவாயில் வழியாக தனியாக சென்ற அவரிடம், குடிபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் அதிகாரி கூச்சலிட்டதால் உடனடியாக அங்கு பாதுகாப்பில் இருந்த ரயில்வே போலீசார், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை பிடித்தனர். இந்த இளைஞரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த இளைஞர், யானைக்கவுனி பகுதியை சேர்ந்த அஜித்குமார் (23) என்பதும், தனியார் கொரியர் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

குடிபோதையில் பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் பெண் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அஜித்குமார் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவு படி அஜித்குமாரை சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கருமுட்டையை விற்ற மனைவி... தட்டிக்கேட்ட கணவருக்கு கொலை மிரட்டல்!

ABOUT THE AUTHOR

...view details