தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ ஓட்டுநர் கைது - சென்னையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ஆட்டோ டிரைவர் கைது

சென்னை: வீதியில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரைக் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை
சிறுமிக்கு பாலியல் தொல்லை

By

Published : Mar 10, 2020, 2:04 PM IST

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வீதியில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு அவரது பக்கத்து வீட்டில் வசித்துவந்த ஆட்டோ ஓட்டுநர் ரவி (36) என்பவர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால், சத்தம் போட்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்த சிறுமி, தனது தாயாரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார் திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் ரவி

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ஆட்டோ ஓட்டுநர் ரவியை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: வாணியம்பாடி அருகே சிறுமி கூட்டு பாலியல் வண்புணர்வு: மூவர் கைது

For All Latest Updates

TAGGED:

Pocso

ABOUT THE AUTHOR

...view details