சென்னை:அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி கருக்கலைப்பு செய்ததாக நடிகை அளித்த புகாரின் பேரில் பாலியல் வன்புணர்வு உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி அடையாறு அனைத்து மகளிர் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் சார்பில் தொடர்ந்த மனுவில், காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டுமெனவும், தேவைப்படும் போது விசாரணைக்கு வர வேண்டும் என நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டி நடிகை மனு
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நடிகை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை இன்று (செப். 16) அளித்துள்ளார். அதில், “பாலியல் வழக்கான ராஜகோபாலன் வழக்கு, சிவசங்கர் பாபா வழக்கு என அனைத்து வழக்குகளிலும் காவல்துறையினர் உடனடியாகநீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.