சாலை விபத்தில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஜெகதீசன், இழப்பீடுகோரி மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சாலை விபத்தால் பாதிக்கப்பட்ட ஜெகதீசனின் உடலில் எத்தனை விழுக்காடு குறைபாடு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து சான்றிதழ் வழங்க சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவ வாரியத்துக்கு பரிந்துரைத்தது.
சான்றிதழ் பெற இருமுறை மருத்துவமனையில் சேர்ந்தும் சான்றிதழ் வழங்கப்படாததால், ஜெகதீசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.