தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 27, 2021, 10:45 PM IST

ETV Bharat / state

சேலையூர் காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்

சேலையூர் காவல் நிலையத்தில் பணியின்போது காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

சேலையூர் காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு
சேலையூர் காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

சென்னை: சேலையூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஹரிஹரன். இன்று (அக்.27) மதியம் ஹரிஹரன் காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதைக் கண்ட சக காவலர்கள் அவரை கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹரிஹரன் மாலை 5.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் சக காவல்துறையினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு: அவகாசம் கோரிய ஓபிஎஸ்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details