சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கல்வி நிலையங்களில் மொழி, இனப்பெருமைகள் ஊக்குவிக்கப்படாமல் ஜாதி, மத, காவி பெருமை ஊக்குவிக்கப்படுவதால்தான் பல வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் மேயர் உட்பட மூன்று நபர்களை வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆதாயத்திற்காக கொலை செய்திருக்கிறார்கள் என காவல் துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சமீபகாலமாக ஏராளமான வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிற்குள் புகுந்துள்ளார்கள். இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்காமல் இருப்பது காவல் துறையின் கையில்தான் உள்ளது" எனத் தெரிவித்தார்.