அரையாண்டுத் தேர்வு கடந்த டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதிவரை நடந்து முடிந்தது. அதன்பின்னர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு ஜனவரி 1ஆம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக விடுமுறை ஜனவரி 4ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவந்ததால் விடுமுறை ஜனவரி 6ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.